11வது இந்து ஆன்மீக கண்காட்சி : "பிப்.3-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்"

11ஆவது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி சென்னையில் தொடங்கியது.
x
நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் சேவையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்11ஆவது இந்து ஆன்மிக மற்றும் சேவை 
கண்காட்சியை சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில், சத்குரு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி நேற்று தொடங்கி வைத்தார். பிப்ரவரி 3ஆம் தேதி வரை ஆறு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தினமும் காலை 9 மணி முதல், இரவு 9 மணி வரை கண்காட்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெண்மையைப் போற்றுதல், வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கருத்துக்களையும் இந்த கண்காட்சி முன்வைக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்