டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடும் திருநங்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு

x

டெல்லி தெற்கு மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் திருநங்கை வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க டெல்லி போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஷ்டீரிய பகுஜன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்ப்ட்டுள்ள திருநங்கை ராஜன் சிங்க்குக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவரது அலுவலகத்தில் வைத்து தாக்கப்பட்டதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்த்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் வேட்பு மனு தாக்கலின்போது உரிய பாதுகாப்பு வழங்க டெல்லி காவல் துணை ஆணையருக்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்