``எனக்கே தெரியாம இப்படி நடந்துச்சா?’’ - பேரதிர்ச்சியில் நடிகர் நாசர்

x

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்ட‌டம் கட்டுவதற்காக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் நாசர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பெயரில் சில மர்ம நபர்கள் முகநூல் மற்றும் எக்ஸ் தலத்தில் போலியாக பணம் கேட்டு விளம்பரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரங்கிமலை சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்